டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தண்ணீருக்கு இரத்தம் : கே. அசோகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

ஆற்றின் ஓட்டத்தை தடுத்தேஅணையாக கட்டியே வைத்துசோறளிக்கும் உழவன் முகத்தில்சோகத்தை ஏற்றியே விட்டார் !நாற்றுக்கு தண்ணீர் கேட்டால்நடுவீதியில் கூப்பாடு போட்டேவெஞ்சினம் கொண்டு தானேவெறியோடு கலவரம் ஏனோ ?ஊற்றான சிற்றருவி தானும்ஊர்பேரினை பார்ப்ப துண்டோ ?!காற்றுதான் வீசூகையில் மேற்குகிழக்கு   என்றா காண்கிறது ?போற்றிடும் காவிரி நதியோபூமியில்  பாய்ந்துதான்  ஓடஆற்றுநீர்  பங்காய் கேட்டால்ஆறாகவே  இரத்த வெள்ளம்!ஓடும்நதி தண்ணீ ரெல்லாம்ஒரினமென்று பார்ப்ப துண்டோ ?காட்டில் பொழியும் மழைநீரும்காட்டாறாய் பெருகித் தானேநாடெது என்றே கேட்டுத்தான்நதீநீராய்  பாய்கின் றதோ ?நாடுநமதென  வாய்தான்  பேச!நதிநீருக்கே  பேதங்கள் ஏனோ ?இயற்கை வானத்து  மழைநீர்எவருக்கும் பொதுவென பொழிகிறது?வயலுக்கு தண்ணீர் கேட்டால்வன்முறை வித்திட்டு நாளும்புயலென சீறிப்பாய்ந்தே வீதியில்போராட்டம்தான் செய்கின் றாரே!தன்னலத்தை  பெருக்கிய தாலேதண்ணீருக்கு  இரத்த வெள்ளமே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.